Posts

ஞானப்பழம்

Image
அனைவருக்கும் வணக்கம். நம்மில் அநேகமானோர் திருவிளையாடல் படத்தைப் பார்த்திருப்போம். அதில் திரு.கண்ணதாசன் அவர்கள் இயற்றிய 'ஞானப்பழத்தைப் பிழிந்து' என்கிற பாடல் வரும்பொழுது, வரிகளின் அர்த்தம் தெரியாமல், உளறிய படியே பாடிக்கொண்டு இருப்பது தான் எப்பொழுதும்  வழக்கம். அப்பாடலில் பல வரிகள் தெளிவாகப் புரிந்தாலும் முதலில் வரும் சில வரிகள் எனக்கு புரிந்ததே இல்லை. ஞானப்பழத்தைத்  தனக்குத் தரவில்லை என்று கோபித்துக்கொண்டு, தன் தாய்தந்தையை நீங்கிச் செல்லும், அழகிய கோபப் பழமான முருகப்பெருமானை, அவ்வை சமாதானப்படுத்த முயலும்படி அமைந்த பாடல் தான் அது. இன்று அதன் அர்த்தம் என்னவாக இருக்கும்? அதை தெரிந்து கொள்ளவேண்டும் என்று மனம் ஆசைகொண்டது. அவ்வரிகளை தேடிப் படித்தபொழுது மனம் இன்னும் குதூகலித்தது. இறைவனை இதைவிட அழகாக புகழ்ந்து விட முடியுமா என்று ஆச்சர்யமும், ஆனந்தமும்  ஏற்பட்டது. உங்களுக்கும் அந்த இன்ப உணர்வு நிச்சயம் துளிர்க்கும். அந்த வரிகள் இதோ., முருகா! நீ ப்ரணவ ஞானப் பழத்தைப் பிழிந்து ரசமன்பினொடு நாமுண்ணவும் கொடுத்த நல்ல குருநாதன் நீ! உனக்கென்ன விதமிக...

கந்தர் அலங்காரம் (பாடல் 12) : வெற்றிச்சேவல்

Image
  படைபட்ட வேலவன்பால் வந்த வாகைப் பதாகை என்னும் தடைபட்ட சேவல் சிறகடிக்கொள்ளச் சலதி கிழிந்து உடைபட்டது அண்ட கடாகம் உதிர்ந்தது உடுபடலம் இடைப்பட்ட குன்றமும் மாமேரு வெற்பும் இடிபட்டவே. "மாபெரும் சேனைப்படையினை உடைய மகாசேனனாகிய வேலாயுதப்பெருமான். அவரது கைகளில் ஏந்தியிருப்பதோ வேலொடு வெற்றிச்சின்னமாகிய சேவற்கொடி. அச்சேவலானது, தன் சிறகுகளை அடித்துக்கொள்ளும்போது சமுத்திரமானது  கிழிந்தது . இப்பிரபஞ்சத்தை மூடியுள்ள ஓடானது உடைந்தது. நட்சத்திரக்கூட்டங்கள் தடுமாறின. மேருவும், இன்னபிற மலைகள் அனைத்தும் இடிந்தன."  என்று பெருமானின் சேவற்கொடியின் வல்லமையை இப்பாடலில் உரைக்கின்றார்.  முருகப்பெருமான் ஞானம், சக்தி, பலம், வீர்யம், தேஜஸ், ஐஸ்வர்யம் என்னும் ஆறு பரிபூர்ண நற்பண்புகளின் சொரூபமாகும்.  இறைவன் உள்ளமோ  தூய்மையும்,  அமைதியும்,   ஈகையும்,  பணிவும்  சாந்தமும்,    அன்பும், கருணையும், பற்றுக்கள் அனைத்தையும் அற்ற தெளிவும் கொண்ட நிர்மல பரிபூரணமா கும்.  முருகப்பெருமான் உண்மையிலேயே அழித்தது  யாரை?    இ ரத்தமும் சதையுமான உடல்களை க...

கந்தர் அலங்காரம் (பாடல் 11) : மாமயில்

Image
  குசை நெகிழா வெற்றி வேலோன் அவுணர் குடர் குழம்பக் கசையிடு வாசி விசைகொண்ட வாகனப் பீலியின் கொத்து அசைபடு கால்பட்டு அசைந்தது மேரு அடியில் எண் திசைவரை தூள்பட்ட அத்தூளின் வாரி திடர்பட்டது. ஜெயத்திற்கு உரியவரா ன,  வேல் ஏந்திய முருகப்பெருமான் அசுரர்களை வதம் செய்ய கிளம்புகிறார். கடிவாளத்தை தளரவிடாது, குதிரையின் வேகத்தையும் விஞ்சும் படி  பறக்கும், த ன்  மயில்வாகனத்தின் மீதேறி வருகிறார். அம்மயில் தோகையின் கொத்துக்கள் அசைவதினால்,    காற்றில்    ஏற்படும் அடர்த்தியினால், அம்மேரு மலையே அசைந்துவிட்டது. அது நிலத்தில் த ன்  கால் ஊன்றி நின்ற கணம், எட்டுத்திசைகளிலும் உள்ள மலைகள் தூள் தூளாயின. அத்துகள்கள் சமுத்திரத்தின் மீது எழும்பி, அச்சமுத்திரமே மேடாகிவிட்டது. வேலவர்தம் வாகனத்தின் வலிமை கண்டே, அசுரர்களின் குடல்கள்  பயத்தில்  கலங்கிவிட்டன.   இறைவன் என்றும் வெற்றியை மட்டுமே உடையவர். ஆதலால் அவர்  வெற்றிவேலவர். இறைவனை மட்டுமன்றி, இறைவன் கொண்ட மயில்வாகனத்தின் வல்லபத்தை அருணகிரிநாதர் இப்பாடலில் போற்றியிருக்கிறார். அடியவர் கூப்பிட்ட குரலுக்கு...

கந்தர் அலங்காரம் (பாடல் 10) : வரையறையில்லா வல்லபம்

Image
சொல்லுகைக்கு இல்லை என்று எல்லாம் இழந்து சும்மா இருக்கும் எல்லையுள் செல்ல எனை விட்டவா இகல் வேலன் நல்ல கொல்லியைச் சேர்க்கின்ற சொல்லியைக் கல்வரைக் கொவ்வைச் செவ்வாய் வல்லியைப் புல்கின்ற மால்வரைத் தோள் அண்ணல் வல்லபனே. கொல்லிப்பண் இசைக்கும்  குறிஞ்சி நில மகளான,   கோவைப்பழம் போன்ற சிவந்த இதழ்களை உடைய,  வல்லி க்கொடிபோன்ற  வள்ளியை அணைக்கும் மலை போன்ற தோள்களை உடைய,  வலிமைமிக்க வேல்கொண்ட  பெருமானே!  நீரே,  சொல்வதற்கு எதுவுமில்லை என்கிற மௌனமாகிய நிலையை நான் அடைய வழிகாட்டிய  பெருமைக்குரியவ ர்! வல்லிக்கொடி என்பது சங்க இலக்கியத்தில், மலைப்பகுதிகளில் வளரும் ஒருவகை த்   தினைக் கொடி. மெல்லிய அந்தக் கொடியினைப் போல மென்மையான உடலுடையவள் வள்ளி. அவளின் இதழ்களோ கோவைப்பழம் போன்ற அழகிய சிவந்த இதழ்கள். அவள் இசைக்கும் பண்ணோ கொல்லி என்னும் பண். தலைவனும் தலைவியும் ஊடல் கொள்ளும்போதும், மகிழ்ச்சியில் களிக்கும் போதும் மருதயாழ் கொண்டு இசைக்கப்படும் பண். அவளை வலிமையான மலை போன்ற தோள்களை கொண்ட பெருமான் அன்போடு அணைத்துக்கொள்கிறார்.  ஜீவாத்மாவும் அவள் போலத...

கந்தர் அலங்காரம் (பாடல் 9) : எதுவுமில்லா ஒன்று

Image
தேன் என்று பாகு என்று உவமிக்க ஒணா மொழித் தெய்வவள்ளி கோன் அன்று எனக்கு உபதேசித்தது ஒன்று உண்டு கூறவன்றோ வான் அன்று, கால் அன்று, தீ அன்று, நீர் அன்று, மண்ணும் அன்று, தான் அன்று, நான் அன்று, அசரீரி அன்று, சரீரி அன்றே. "தேனும், இனிப்பான பாகும் கூட உவமை குன்றலாக தோன்றும்படி, இனிமையான மொழியை பேசும், தெய்வீக மனமுடைய வள்ளியம்மையின் கணவனாகிய முருகப்பெருமான், எனக்கு உபதேசித்தது ஒன்றே ஒன்று. அதைக் கூறுகிறேன் கேளுங்கள். அது வான் அன்று; காற்றன்று; நெருப்பன்று; நீரன்று; நிலமன்று; தான் அன்று; நானும் அன்று; சரீரம் உடையதும் அன்று; சரீரம் அற்றதும் அன்று" என்று ஆர்வத்தோடு  நமக்குக் கூற விழைகிறார்.  இங்கு இறைவனையே இனிமையானவன் என்று கூறுவதை விடுத்து, இனியவளான வள்ளியம்மையின் கணவன் என்று ஏன் கூறவேண்டும்? வள்ளி கணவன் என்று இறைவனை பல இடங்களில் பாட என்ன காரணமாக இருக்கும் என்று யோசித்தபோது தான், அதன் உண்மை தத்துவம் புரிந்தது. இங்கு வள்ளி என்பவள் நம் ஜீவாத்மா. அவள் பாகையும் தேனையும் விட இனிய மொழியுடையவள். அப்படியென்றால் கடும் சொல் ஒன்றுகூட சொல்லாத, சொல்குற்றம் இல்லாத அன்பான வார்த்தைகளை ப்  பேசக்கூட...

கந்தர் அலங்காரம் (பாடல் 8) : தனி என்னும் தத்துவம்

Image
  ஒளியில் விளைந்த உயர் ஞான பூதரத்து உச்சியின் மேல் அளியில் விளைந்தது ஓர் ஆநந்தத் தேனை அநாதியிலே வெளியில் விளைந்த வெறும் பாழைப் பெற்ற வெறும் தனியைத் தெளிய விளம்பியவா! முகம் ஆறுடைத் தேசிகனே! ஒளியில் உருவான  ஞானம் என்னும்    மலையின் உச்சியில், கருணையினால் உருவான ஒரு தனிஇன்பத்தை, தொடக்கமும் முடிவும் இல்லா பெருவெளியின் தத்துவத்தை நான் விளங்கிக்கொள்ள, எனக்கு வழிகாட்டிய ஆறுமுகமுடைய பெருமானே!  என்று இறைவனை போற்றுகிறார்.   இந்தப் பிரபஞ்சம் என்பது நம் மனித அறிவுக்கும் அதில் உதிக்கும் கற்பனைகள் அத்தனைக்கும் அப்பாற்பட்டது. இந்த உலகம், இந்தப் பிரபஞ்சம் என்று இவைகளை பற்றிய ஒரு தெளிவின்மை என்பது எல்லோருக்கும் இருக்கின்றது என்பது உண்மை.  உண்மையிலேயே   இந்தப்  பிரபஞ்சம் என்பது எவ்வளவு பெரியது; எதனால் ஆனது; என்னென்ன அற்புதங்கள் அதில் இருக்கின்றன;  தானே உருவானதா; யாரேனும் படைத்தார்களா; படைக்கப்பட்டது என்றால்   எப்படி இது படைக்கப் பட்டது; யாரால் படைக்கப்பட்டது;  எதற்காக இவை படைக்கப்பட்டன;   ஒரு பிரபஞ்சமா; பல பிரபஞ்சங்கள் உள்ளனவ...

கந்தர் அலங்காரம் (பாடல் 7) : உள்ளப்பிணி

Image
சளத்தில் பிணிபட்டு அசட்டுக் கிரியைக்குள் தவிக்கும் என்றன் உளத்தில் பிரமத்தைத் தவிர்ப்பாய்; அவுணர் உரத்து உதிரக் குளத்தில் குதித்துக் குளித்துக் களித்துக் குடித்து வெற்றிக் களத்தில் செருக்கிக் கழுதாட வேல் தொட்ட காவலனே! பிறரை துன்புறுத்தும் கொடியவர்களான அவுணர் எனும் அசுரர் இனத்தை, உன் திருவேலினை ஏவி அழித்தாயே! உன் வெற்றிக்களத்திலே, அவர்களின் மார்பிலிருந்து இரத்தம் பெருகி வழிந்து ஓடுகிறது. இரத்தம் பருகும் பேய்கள், அந்த இரத்த வெள்ளத்தில் ஆனந்தமாய் குதித்து, அதில் முழுகி, அதைக்குடித்து ஆனந்தமாய் ஆடி கொண்டு இருக்கின்றன.  இறைவா! என்னையும்  துன்பம் என்னும் கயிறு  சுற்றிக்கொண்டு இருக்கிறது. மூடத்தனமான காரியங்களைச் செய்து மீண்டும் மீண்டும் கர்மங்களுக்குள் மாட் டி க்கொண்டு என் உள்ளம் தவிக்கிறது.  என் உள்ளப்பிணிகளை த்  தவிர்த்து எனை ஆட்கொள்வாய் இறைவா!   என்று இறைவனிடம் மன்றாடுகிறார்.  உடலாலும் உள்ளத்தாலும் இறைவனை வழிபடுதலே கிரியை ஆகும்.  துன்பம் களைய இறைவனை உடலாலும் உள்ளத்தாலும் வழிபட வேண்டும்.   துன்பத்திற்கு காரணம் காமம், குரோதம் ( கோப...